இரவு பொழுதில் உறங்கி கொண்டிருக்கிறது...
இந்த அழகிய நிலவு.....
ஓரத் தாலாட்டாய் அன் நிலவின் கால் சலங்கைகள்...
நிலவது எச்சில் விழுங்குவதை கழுத்தோரத்து ரத்த குழாய்கள்
படம் பிடித்து காட்டுகின்றன.....
அழகிய நிலவில் ஒரு துவாரம்... அங்கு
முப்பத்திரண்டு வேற்று கிரக வாசிகள்....
என் கண்ணவனை கீழே பணிக்க...
நிலவதனில் இரண்டு கவிதைகள்...
அண்டம் தாண்டியும் வேக தடுப்புகளா???
பார்வை அம்புகளை இன்னும் பணிக்கிறேன்....
நிலவதன் மையத்தில்
ஒரு காயம் கூட....
ஏய் ஆம் ச்ற்றோங்கே???
போயும் போயும் இந்த நிலவிலா நீ கொடி நடுவது????
சிவந்த கண்களை இன்னும் பணிக்கிறேன்....
என்ன பார்வை.... இடம் பொருள் கருதி
இன்னும் கீழே பணிக்கிறேன்....
இரு நீள குச்சிகள் அந்த நிலவில்...
ஒவ்வொரு குச்சியிலும் ஐந்தைந்து சிறிய குச்சிகள்..
பின்னழகையும் ரசித்திருப்பேன்...
பொழுது விடியாதிருதிருந்தால்...
ஏய் சேவலே... கூவியது போதும்..
உறங்க விடுங்கள் இந்த அழகிய நிலவை....
No comments:
Post a Comment