எனக்காய் நீ என்று
நீ சொல்ல நான் நம்பி....
ஏமாந்து நிற்கிறேன் இன்று!!!!!
இந்த நொடி
இந்த கல்லறை கூட என்னை
ஏளனம் செய்கின்றன...
பெண்ணே...
நீ என்னுடன் இருந்த வேளைகளில்...
சுவனத்தை கண்டு களித்தேன்...
ஏழை பிள்ளை அப்பத்தை காக்கை கொண்டு போவதாய்...
களித்திருந்த நொடிகளை
பிரிவெனும் நதியிலே கரைத்து நீ சென்றிட்டாய்!!!!
இந்த கல்லறையில் சாய்ந்து கொண்டு
கணீர் வடிக்கிறேன்...
உன்னை நினைத்த வேளைகளில்
என் நகங்கள் அழிக்கப்பட்டது..
அழிக்கப்படாத நிஜங்களாய்
உன் நகல்கள் மட்டும்
நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது!!!!
என்னுள் உன் பெயர் சொல்லி
உன்னை நினைவூட்டும்
நினைவுகள் மீது சத்தியமாக...
உன்னிடம் காவு கொடுத்த
என் இதயம் மீது சத்தியமாக...
என்னை
கொள்ளை கொண்டு
குழியில் தள்ளிய உன்
விழிகள் மீது சத்தியமாக....
கோடி ஆண்களை
சோடி இன்றி தவிக்க வைக்கும
பெண்கள் மீது சத்தியமாக....
ஒரு துளியேனும்
கசியாது உன் மேல் நான் வைத்த
பிரியம் என் காதல.....
பிரிக்க முடியாத
இழைகளால்...
இணைக்கப்பட்ட இதயங்களை
சொல் எனும் கோடரியால்
களைத்தெறிந்து விட்டாய்....
நீ நீயாக இருக்க
என்னை நாயாக மாற்றிய பெண்ணே....
உனக்காய் நான் கொடுத்திருந்த
ஓரிரு நிமிடங்களையேனும்
பள்ளிக்காய் கொடுத்திருந்தால்
நல்ல ஒரு பெண்ணுடன்.. நானும் இருந்திருப்பேன்....!!!!
உயிரை எடுத்து
பூக்கள் சூடி மாலை நெய்தேன்
உனக்காய்....
நீ மாலை மற்றிக்கொண்டாய்
வேறு ஒருவனுடன்.,...
என்
காதல்
மிதித்து செல்லப்படும்
வெறும் நிழல்களாய் இன்று!!!!!
No comments:
Post a Comment