Friday, May 30, 2014

விஞ்ஞான காதல்...

இதோ.. தனிமையில்
சடத்துவ வாயுவாய் நான் மட்டும்....

முதல் பார்வை
அடிப்படை சுரமாய்
நெஞ்சில் பிரதிபலிக்க..
அவள் எண்ண அலைகள் மட்டும்
என் காதலை காலிக் கொண்டிருந்தன திருசியமாய்...

கதோட்டு கதிராயும்
நேர்கோடாயும் இருந்த நெஞ்சை
வலஞ்சுளியாய் திருப்பம் எடுத்தாள் பாவி...
முழு வட்டமாய் நெஞ்சம் மையமாய் தஞ்சம்...
ஆக தொடலியாய் என்
பறிபோன சுதந்திரம்....

விசுறு பம்பியாய்
கண்கள் காண
நெஞ்சத் தளவாடியில் அவளின் 1000 விம்பங்கள்..

முடிவிலியில் தேட
காணவில்லை தேவியவள் தெய்வ முகம்!!
ஓ...
கொஞ்சம் கொஞ்சம் உறிஞ்சிக் கொண்டதோ
நெஞ்சத் தளவாடி...

மூடிய பொருளில்
சடத்துவ திருப்பமாய்
அவளை மட்டும்
கொண்ட நெஞ்சம்..
அவள் u.v பார்வையில்
ஒபிற்றலாய்
வளைத்தெடுக்கப்பட்டது!!!
விதி கண்ட வலியிலும் சுகம் காண்கின்றேன்..
விளைபொருளுக்காய்..

என் கண்ணில்
நீரை இடம்பெயர்க்க...
அழகிய நெஞ்சை கீறுகிறாள்
சுரமானியாய்.....
ஆக
அவள்முன் எளிய ஊசலாய் நான்!!

அவள்
தயாரிப்பாளர்
தமிழில் தந்தையாம்...
பொருத்தம் பார்த்த பின்
எடுகோள் முன்வைக்கிறார்
திருமணத்திற்கு
காதல் நிபந்தனையில் தாக்கம் இல்லையாம்....

உன் பின்னால்
அலைவு நிகழ்த்தியத்தும்
உனக்காய்
என்னை செப்பம் செய்ததும்
இன்று
வெறும் வேடிக்கையாய்
எனக்கு!!!!

இன்று
காரணிப்படுத்த
அன்றயதும்
இன்றயதும்
தேறிய விளைவு
பூச்சியம் தான்...
சமப்படுத்தாத தாக்கமாய்
என்

"காதல்"

Thursday, May 29, 2014

இவளும்...

இதுவும் ஒரு காதல் கவிதை தான்....
எனக்கு பதினாறு..
அவள் வயதை கேட்கவில்லை நான்
பதினாறை மிஞ்சிடுமோ - என்ற 
பயமாக கூட இருக்கலாம்...!!!

மாலை வகுப்பு..
சார் ஐ வற்புறுத்தி வைத்து கொண்டது...
மஞ்சளா நீலமா,
சட்டையில் பட்டிமன்றம்...
கண்ணாடி முன்னின்று
சீவிய தலை கோதி விட்டு...
அப்பா பாக்கெட்..
எதனை நூறுகள் இருந்தாலும்
ஐம்பதை காவிக்கொண்டு..
வகுப்பு விஜயம்!!!

வருவாள்..
இரட்டை ஜடை கூந்தல்,
கீழ் விட்டு மேலிழுத்த துப்பட்டா..
மூக்கை விட பெரிய மூக்குத்தி..
அவளுக்கென்றே பிரம்மன் செய்த இரு...

கண்கள்...

பாடத்தை மறக்கடிக்கும் சிரித்த வதனம்..
தொண்ணூறு பாகையில் தோழியருடன் அரட்டை..
வலிக்காமல் சீவுவாள் பென்சிலை...

அவளங்கு வந்தபின்..
அவள் அறியாது அவளை நோக்க வேண்டும்..
அதுதான் அன்றைய நாட்களில்
எனக்கும் எனக்கும் ஒப்பந்தம்...

மூன்று மணிநேரம் தடையின்றிய
தேவாமிர்தம்..
முடிவிற்கு வரும்..
நெஞ்சுக்குள் மணியோசை கேட்கும்..
அதைதான் வகுப்பு முடிவு சமிக்ஞை
என்பான் நண்பன்....

சைக்கிளில் வருவார் அப்பா...
ஏறியமர்ந்து திரும்பிப்பார்ப்பாள்... 
ஏதுமறியாது எச்சில் விழுங்குவேன்..
அது மட்டும் தான் ஞாபகம்..

பொது பரீட்சை முடிய
காணவில்லை தேவி முகம்..
நிமிடங்கள் வருடங்களானது..
வீடு வெறிச்சோடியது...

கொண்ட காதலை
கூறவில்லை ஒருபோதும்..
வேதனையில் மனம் கனகனத்தது...
கண்ணீர் கண்களை முட்டியது...

மீண்டும் ஒருத்தி..
எடையிலும் நடையிலும் உடையிலும்
அவளைவிடவும் தூள்.. 

" மச்சான்.. யாரு டா இவ??? "
அருகிலிருந்த  நண்பனை கேட்டேன்...

"மச்சான் அப்போ அவ???"

"விடு மச்சான்.. அவ கேரக்டர் மோசம் டா.. கழட்டிவிட்டுட்டேன்... "

#கண்ணால் பார்த்து பலபேரை கழட்டி விட்டவர்களில் நானும் ஒருவன்..

சீதனம்!!!

பெரிய படிப்பில்லை...
காரில்லை...
அவ்வளவாய் அழகில்லை... 
பெரிய வீட்டு மருமகனாகும்
தகுதியுமில்லை!!!

ஒரு 100CC சைக்கிள் தான்...
மாதம் 25 உழைப்பு...
கடன் கழிய சுளையாய் 15 மிஞ்சும்...
கணக்குப்போட்டு வாழும்
மிடில் கிளாஸ் நான்!!!

அவன் இருந்தான்
இஞ்சினியர்...
உழைப்பு லட்சங்களில்...
அரவிந்த் சாமி கலரு 
கருப்பு கொரொல்லா காரு!!!

அவர்கள் எனக்காய் 
காத்திருக்கவில்லை...
அவனையே எதிர்பார்த்தார்கள்... 
நான் காணாத அவன் 
கொண்டவைகளின் பெறுமதி 
அவர்களுக்கு தெரியும்...
பெண்ணோடு ஒரு தொகையும் கொடுத்தார்கள் அவனுக்கு!!!

சமூகம் என்னையும் 
அவனையும் ஒப்பிட்டது.. 
அவன் சீதனம் வாங்கிய கயவன்
என்று பெயரும் சூட்டியது!!! 

ஒன்று மட்டும் உண்மை...
சீதனம் தவிர் என்றால் 
ஆண்கள் அழகை பொருளாய் பார்த்திருப்பர்...
சுமாரான நங்கையரெல்லாம்
கன்னியாய் காலம் தள்ளியிருப்பர்!!! 

கோச்சடையான் விமர்சனம்...



நானும் நண்பனும் போய் தியேட்டர்ல உக்கார்ந்தோம். பொதுவாவே தலைவர் படம்னா கேக்கவா வேணும்?? அதே கூட்டம். அதே ஆரவாரம். ரஜினி படங்கள தொடர்ந்து பாக்குறதால அது பெரிய ஒரு ஆச்சர்யமா ரெண்டு பேருக்குமே படல. படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம் ஆச்சு. நண்பன் கிட்ட கேட்டன்

"என்ன டா இது?? சின்ன பசங்க கார்ட்டூன் மாதிரி இருக்கு.. தலைவர எதிர்பார்த்து வந்தது வேஸ்ட் டா.." அதுக்கு நண்பன் சொன்னான்

"மச்சான்.. தமிழ் சினிமாவுக்கு இந்த அனிமேஷன் புதுசு. நமக்கு பழக்கம் இல்ல. இது ஒரு அனிமேஷன் படம். அத முதல்ல நல்லா புரிஞ்சிக்கணும். ஒரு படையப்பாவையோ சந்திரமுகியையோ இங்க எதிர்பாக்க கூடாது"

"அட ஆமால்ல.. தலைவர் தலைவர் தான் டா.. என்னா ஸ்டைலு.. ஒன்னு கவனிச்சியா நாசர், சரத் குமார், நாகேஷ் எல்லா கதாப்பாதிரமும் செம்மையா பொருந்திருக்குல்ல.." ஆச்சர்யமா சொன்னன் நண்பன்கிட்ட..

"புலிக்கு பொறந்தது பூனையாகுமா டா?? தலைவர் மகள் எடுத்த படம். எல்லாமே பர்பெக்டா தானே இருக்கணும்.." நண்பன் சொன்னான்.

"இருந்தாலும் மச்சான் அனிமேஷன் இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்கலாம்" அங்கலாய்த்தேன் நான்.

"ஆமா டா. எனக்கும் தோணிச்சு.. ஆனா இது ஆரம்பம் தானே மச்சி.. முதல் தடவைக்கு இது ரொம்ப அதிகம் டா.." நண்பன் விட்டுக்கொடுக்காம பேசினான்.. தொடர்ந்தும் நண்பன் சொன்னான்

"ஒவ்வொரு சீனுமே சொல்லப்பட்டிருக்க விதம் நல்லாருக்குல்ல மச்சான்?? என்ன பிரமாண்டம்.. அப்பப்பப்பா.." அவனின் வியப்பு கண்கள்ல தெரிஞ்சுது.

"என்ன டா வந்ததுலருந்து பாக்குறன்.. நம்ம ஒஸ்கார் நாயகன பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீ??" நான் நண்பன்கிட்ட கேட்டேன்..

"நான் என்னத்த டா சொல்ல?? மனுசனா அவன்?? இங்க பொறக்க வேண்டியவனே இல்ல டா.. நமக்கு கிடைச்ச பொக்கிஷம் அந்த ஆளு.. பாட்டென்ன.. Background Score என்ன?? சான்சே இல்ல டா"

"அதுவும் சரிதான்.."
நான் சொல்ல படமும் முடிவுக்கு வந்திச்சு. நண்பன் பேசதொடங்கினான்.

"என்னா கத என்னா இயக்கம்.. என்னா இசை.. ரஜினி ரசிகன் கண்டிப்பா பாக்கவேண்டிய படம் இல்லையா மச்சான்??" அதுக்கு நான்

"அதென்னமோ உண்மை தான்.. உனக்கு படத்துல எந்த குறையுமே இல்லையா??" கேட்டன்.

"ஏன் இல்லாம??? இந்த கதைய தலைவர் அனிமேஷன் இல்லாம நடிச்சிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும்.." நண்பன் ஆவலோட சொன்னான்.

-Rimaz-

#விமர்சனம் என்ற பெயரில் கதை சொல்லி தயாரிப்பாளரை நஷ்டப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.

அவள் பெயர் சஹானா...

சஹானா அவள் பெயர். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அவளிடம் காதலை சொன்னது. உடனே "ஓ கே" சொல்லிவிட்டாள். நாட்காட்டி மட்டும் 2012 ஏப்ரல் 13 என்று நாளை காட்டியது.

"ஹேய்.. இன்னிக்கு தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. Facebook ல Relationship Status Update பண்ணட்டுமா??" அந்த சந்தோஷத்தில் நான் கேட்ட கேள்வி.

"லூசா உனக்கு??? வேணாம்ப்பா.. என்னோட அண்ணா அக்கா ரெண்டு பேரும் அதுல இருக்காங்க... பாத்தா அவ்ளோதான்..." கண்களால் கெஞ்சினாள்.

"சஹானா... நம்ம Love அ என் Friends கிட்ட சொல்லட்டுமா??" ஏக்கத்தோடு கேட்டேன்.

"டேய் இப்போ உனக்கு என்ன பிரச்சன?? வேணாம் டா.. அப்புறம் அவங்கெல்லாம் என்ன ஒருமாதிரி பாப்பாங்க.. என் Friends க்கு தெரிஞ்சா வீட்ல சொல்லிருவாங்க.." செல்லமாய் சிணுங்கினாள்.

ஒரு பண்டிகை நாள்...

"வாரியா ஷாப்பிங் போவோம்???" அன்பான கட்டளை விடுத்தேன்.

"விளையாடறியா நீ??? எங்க பாத்தாலும் என் சொந்தக்காரங்க இருக்காங்க.. அவங்க கண்ணுல பட்டா அவ்ளோதான்.. நேரம் வரும்.. அன்னிக்கு எல்லா இடமும் சுத்தலாம்.."

நியாயமாய் பேசினாள். பேச்சில் சமூகத்தின் மீதான அவள் பயம் தெரிந்தது. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நண்பன் Call பண்ணான்.

"மச்சான்.. விஷயம் கேள்விப்பட்டியா?? சஹானாக்கு Accident ஆம்.. அப்போல்லோ Hospital ல வச்சிருக்காம்."

விரைந்து ஓடினேன். அவள் முகம் வெள்ளை துணி கொண்டு மூடப்பட்டிருந்தது. நான் ரசித்த என் தேவதையின் உடலை பூத உடல் என்றார்கள். அவளுடைய அம்மா என்னிடம் வந்து கேட்டார்,

"தம்பி.. நீங்க யாரு??"

"சஹானாவோட Friend Aunty..."

அவள் பொத்தி பொத்தி வைத்த என் காதலும் அவளோடு புதைந்து போனது. எனக்கும் கடவுளுக்கும் அவளுக்கும் இடையில் நடந்த முக்கோண காதல் கதையில் கடவுள் முந்திக்கொண்டார். அதுவரை நாத்திகனான நான் அன்றுமுதல் ஆத்திகன் ஆனேன்!!!

ரகசிய உரையாடல்...

மேல் வீட்ல வாடகைக்கு இருக்கிற பொண்ணு பாவனா.. வீட்ல யாருமில்லாத நேரம் மொட்டை மாடில நின்னு பேசினோம்...

"பாவனா.. சொன்னா கேளு.. கலைச்சிரு.." நான் சொன்னன்.

"முடியாது.. என்னால கலைக்க முடியாது" அவ பிடிவாதமா பதில் சொன்னா.

"இங்க பாரு.. எங்கப்பா வேற ஊருக்கு போயிருக்கார்.. வந்தார்னா பெரிய பிரச்சினை ஆகும்.. புரிஞ்சிக்க..." மறுபடியும் கெஞ்சினேன்.

"ஒரு உயிர்னா உனக்கு விளையாட்டா போச்சா Rimaz.. உங்க அப்பா வரட்டும் நான் பேசி புரிய வைக்கிறன்.." மறுபடியும் அதே பிடிவாதம்.

"அவர் யாரு சொன்னாலும் கேக்க மாட்டாரு.. யாருக்குமே தெரியாம கலைச்சிட்றது தான் பெட்டர்.." நான் சொல்ல..

"ஓ.கே.. உனக்கு அதுதான் வேணும்னா கலைச்சிடலாம்.. ஆனா இந்த பாவத்துக்கு நீதான் காரணம்..." கண் கலங்கி விட்டாள்..

#வாசலில் குருவி கட்டிய கூட்டில் இந்தப் பெண்களுக்கு எத்தனை சென்டிமென்ட்???