Thursday, May 29, 2014

சீதனம்!!!

பெரிய படிப்பில்லை...
காரில்லை...
அவ்வளவாய் அழகில்லை... 
பெரிய வீட்டு மருமகனாகும்
தகுதியுமில்லை!!!

ஒரு 100CC சைக்கிள் தான்...
மாதம் 25 உழைப்பு...
கடன் கழிய சுளையாய் 15 மிஞ்சும்...
கணக்குப்போட்டு வாழும்
மிடில் கிளாஸ் நான்!!!

அவன் இருந்தான்
இஞ்சினியர்...
உழைப்பு லட்சங்களில்...
அரவிந்த் சாமி கலரு 
கருப்பு கொரொல்லா காரு!!!

அவர்கள் எனக்காய் 
காத்திருக்கவில்லை...
அவனையே எதிர்பார்த்தார்கள்... 
நான் காணாத அவன் 
கொண்டவைகளின் பெறுமதி 
அவர்களுக்கு தெரியும்...
பெண்ணோடு ஒரு தொகையும் கொடுத்தார்கள் அவனுக்கு!!!

சமூகம் என்னையும் 
அவனையும் ஒப்பிட்டது.. 
அவன் சீதனம் வாங்கிய கயவன்
என்று பெயரும் சூட்டியது!!! 

ஒன்று மட்டும் உண்மை...
சீதனம் தவிர் என்றால் 
ஆண்கள் அழகை பொருளாய் பார்த்திருப்பர்...
சுமாரான நங்கையரெல்லாம்
கன்னியாய் காலம் தள்ளியிருப்பர்!!! 

No comments:

Post a Comment