Saturday, June 7, 2014

நான் வேசி தான்..



முகத்தில் சிரித்து
அகத்தில் அழுதும்
எட்டி அறைய மனம் துடிக்க
தட்டு தடவி உறவு கொண்டு
சுட்டுவிடும் விளக்கையும்
எட்ட நினைக்கும்
விட்டில் பூச்சியாய் வாழ்கிறேனே
நான் வேசிதான்...

வீட்டில் பிள்ளை
கோவிலில் பக்தன்
பாரில் குடிகாரன்
தெருவில் அய்யோக்கியன்
அவரவர் மனம் ஏற்றார்ப்போல் தினம்
என்னை மறைத்து வாழ்கிறேனே
நான் வேசிதான்...

அவள் துரோகி
இவன் துரோகி
நண்பனென்று எவனுமில்லை
அல்லல் முழுதும் என்னில் தான்
எனக்கென்று நான் வகுத்த
காமப்பசியை
பலரில் சாட்டி இன்பம் கண்ட
நான் வேசிதான்...

காசுக்காய் மலர்ந்தும்
காய்ச்சலிலும் ஓடியும்
பகட்டுக்காய் பரிணமித்தும்
ஏட்டுக்காய் ருசி ருசித்தும்
முதலாளிமார் இன்பம் காண
வியர்வை சிந்தி அசந்தேனே
நான் வேசிதான்...

தாய் பிரிந்து
பெற்ற சேய் பிரிந்து
நாடு பிரிந்து நண்பர் பிரிந்து
உற்ற உறவுகள் தான் பிரிந்து
கூடுவிட்டு கூடு பாய்ந்து
சில்லறைக்காய் ரெக்கை கட்டிய
நான் வேசிதான்...

வேசிக்கு பால் வராதாம்
ஆணென்ன பெண்ணென்ன
உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும்
அத்தனை ஜீவனுமே
வேசிகள் தான்!!!

No comments:

Post a Comment