Saturday, June 28, 2014

கொஞ்சம் பொறுத்திருக்கலாம்!!!

"என்கூட வா நான் சொல்றன்..." தன் ஐந்து விரலால் என் சுட்டுவிரல் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

"எங்க கூட்டிப்போற?? அம்மா தேடுவாங்க... இங்கயே சொல்லன்.." கெஞ்சிக்கொண்டே அவள் இழுவையில் பின் தொடர்ந்தேன்.

"வீட்ல வச்சி சொல்ற விஷயமில்ல இது.. உன் எதிர்காலமே மாறப்போகுது.. சத்தம் போடாம வா" இழுவையில் வேகம் கூடியது.

அழகான புற்றரை, வயல் வெளி கடந்து போனோம். போனது நான் அவள் என்ற இருவர் அல்ல. அவளோடு கலந்து நான் இல்லாமல் போக அவள் மட்டும்தான்.

"உனக்கு என்ன பிடிச்சிருக்கா??" வழியில் இடைநிறுத்தி கேட்டாள்.

"ம்ம்.. ஆனா நீ யாரு?? எதுக்காக என்கிட்ட இதெல்லாம் கேக்குற??" செய்வதறியாது கேட்டேன்.

ஒரு வெட்ட வெளிக்குப் போய் சேர்ந்தோம். பனிமூட்டமாய் இருந்தது. கோள்கள் எல்லாம் தலைக்கு மேல் சுற்றியது. பெரிய சைஸ் பட்டாம்பூச்சிகளும் புறாக்களும் பறந்தன. வெள்ளை உடையாய் அவள் உடையும் மேலாடை நீங்கி என்னுடலும் காட்சி தந்தது.  

"கண்ண மூடு சொல்றன்.." என்றதும் நான் கண்ணை மூட நெஞ்சில் கை வைத்தாள். வானிலிருந்து இரண்டு துளிகள் கண்ணில் வீழ்ந்தன. கண்ணை லேசாக திறந்து பார்த்தேன்.

அருகில் அம்மா சிவப்பு நிற வாளியுடன்.

"கொஞ்சம் பொறுத்திருக்கலாம்" என்றது உள் மனது.

No comments:

Post a Comment