Thursday, May 29, 2014

ரகசிய உரையாடல்...

மேல் வீட்ல வாடகைக்கு இருக்கிற பொண்ணு பாவனா.. வீட்ல யாருமில்லாத நேரம் மொட்டை மாடில நின்னு பேசினோம்...

"பாவனா.. சொன்னா கேளு.. கலைச்சிரு.." நான் சொன்னன்.

"முடியாது.. என்னால கலைக்க முடியாது" அவ பிடிவாதமா பதில் சொன்னா.

"இங்க பாரு.. எங்கப்பா வேற ஊருக்கு போயிருக்கார்.. வந்தார்னா பெரிய பிரச்சினை ஆகும்.. புரிஞ்சிக்க..." மறுபடியும் கெஞ்சினேன்.

"ஒரு உயிர்னா உனக்கு விளையாட்டா போச்சா Rimaz.. உங்க அப்பா வரட்டும் நான் பேசி புரிய வைக்கிறன்.." மறுபடியும் அதே பிடிவாதம்.

"அவர் யாரு சொன்னாலும் கேக்க மாட்டாரு.. யாருக்குமே தெரியாம கலைச்சிட்றது தான் பெட்டர்.." நான் சொல்ல..

"ஓ.கே.. உனக்கு அதுதான் வேணும்னா கலைச்சிடலாம்.. ஆனா இந்த பாவத்துக்கு நீதான் காரணம்..." கண் கலங்கி விட்டாள்..

#வாசலில் குருவி கட்டிய கூட்டில் இந்தப் பெண்களுக்கு எத்தனை சென்டிமென்ட்???

No comments:

Post a Comment